ஆ: மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
மேகத்தில் குழைத்து பெண்ணொன்று படைத்து
வீதியில் விட்டு விட்டார் இப்படி இங்கொரு
பெண்மையை படைக்க தன்னிடம் கற்பனை தீர்ந்து
என்னைத்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான்
அவளின் ஆசைக்குள் நுழைந்த காற்று
உயிரை தடவி திரும்பும் போது
மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே
ஒஹோ... மழையின் துளிகள் அவளை நனைத்து
மார்பு கடந்து இறங்கும் போது
முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே
(மின்ன)
ஆ: நிலவின் ஒளியை பிடித்து பிடித்து பாலில் நனைத்து
பாலில் நனைத்து கன்னங்கள் செய்து விட்டாய் உலக
மலர்கள் பறித்து பறித்து இரண்டு பந்துகள் அமைத்து
அமைத்து பெண்ணை சமைத்து விட்டார் அழகு என்பது
ஆண்பாலா பெண்பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்த்து
அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா
ஏஹே... கவிதை என்பது மொழியின் வடிவம் என்றொரு கருத்தும்
இன்று உடைந்தது கவிதை என்பது கன்னி வடிவமடா
(மின்ன)
ஆ: மின் மினி பிடித்து மின் மினி பிடித்து கண்களில் பறித்து
கண்களில் பறித்து கண்மணி கண் பறித்தாள் தங்கத்தை
எடுத்து அம்மியில் அரைத்து மஞ்சளாய் நினைத்து கன்னத்தில்
குழைத்து ஜீவனை ஏன் எடுத்தாள் காவித்துறவிக்கும் ஆசை
வளர்த்தவள் ஆணுக்கும் பொண்ணுக்கும் ஆண்மை கொடுப்பவள்
பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே ஒஹோ.....
தெரிந்த பாகங்கள் உயிரை தந்திட மறைந்த பாகங்கள்
உயிரை வாங்கிட ஜீவன் மரணம் ரெண்டும் தருபவனே
(மின்ன)











